ராஜஸ்தான் மாநிலத்தில் மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இனத்தாருக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என இந்திய பொலிசார் கூறுகின்றனர்.
கலவரத்தை அடக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருக்கும் தங்கள் இனத்தை பழங்குடியினத்தவராக அரசு அங்கீகரித்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களில் சிறப்பு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென குஜ்ஜார்கள் கோரிவருகின்றனர்.
சுமார் ஓராண்டுக்கு முன்னரும் இதேபோல் ஒரு போராட்டமும் கலவரமும் நடந்து அதில் இருபது பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. NDTV.com: Gujjar leader refuses talks with govt
2. Class violence leaves 35 dead in India - CNN.com
3. The Statesman: “Cops gun down 18 more Gujjars”
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்