பெய்ரூட்டின் மேற்குப் பாதி ஹெஸ்புல்லா கிளர்ச்சிக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது
லெபனானில் அரசாங்க ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே மூன்று நாட்களாக மோதல்கள் நடந்துவரும் நிலையில், தலைநகர் பெய்ரூட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்குப் பாதியின் பெருமளவு கட்டுப்பாடு லெபனான் ஷியா குழுவான ஹெஸ்புல்லா வசம் வந்துள்ளது.
ஹெஸ்புல்லாவின் இந்த செயற்பாட்டை ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்போடு ஒப்பிட்டு லெபனான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பேசினார். வீதிகளை மட்டும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை, ஆனால் பத்திரிகை அலுவலகங்களையும் அரசியல் கட்சி அலுவலகங்களையும் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஆதரவுப் பிரிவினருக்கு இது ஒரு பெரும் பின்னடைவு என்று பெய்ரூட்டிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
நன்றி: பிபிசி
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்