பர்மாவில் புதிய அரசியலமைப்பு குறித்த வாக்கெடுப்பு
தங்களுடைய இராணுவ ஆட்சியை மேலும் மேலும் தொடர்வதற்காக இந்த மக்கள் வாக்கெடுப்பு என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய அரசியலைமைப்பு தொடர்பாக சூறாவளியால் சின்னாபின்னமான பர்மாவில் மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்பை தள்ளி வைக்குமாறு விடுக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிராகரித்து தேர்தல் நடைபெற்றுள்ளது.
வாக்கெடுப்பு நிலையங்களில் ஏராளமான இராணுவத்தினர் இருந்ததால் தாங்கள் வேறு வழியின்றி ஆதரவாக வாக்களித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். சூறாவளியினால் பாதிக்கப்படாத இடங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே, தரைவழியாக ஐ.நாவின் முதல் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத் தொடரணி பர்மா சென்றுள்ளது. ஆனால் பர்மாவின் இராணுவத் தலைமை வெளிநாட்டு நிவாரண பணியாளர்களுக்கு தடை விதித்துள்ளது.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. BBC NEWS | Asia-Pacific | Burma votes amid cyclone aid row
2. Despite chaos, Myanmar holding referendum - Los Angeles Times
3. Cyclone aftermath overshadows Myanmar vote - CNN.com
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்