விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிலரங்கு | சற்றுமுன்...




விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிலரங்கு

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 11.05.2008(ஞாயிறு) வலைப்பதிவர் பயிலரங்கு நடைபெறுகிறது.காலை ஒன்பது மணிமுதல் மாலை வரை நிகழ்ச்சி நடைபெறும்.தமிழ்நாட்டு அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்கள் வலைப்பதிவர் பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.கல்லூரி முதல்வர் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்.

விழுப்புரம் புதுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயிற்சிபெற-பயன்பெற உள்ளனர்.பயிற்சியாளர்களுக்குப் பயன்படும் வண்ணம் குறுவட்டு ஒன்று உரூவா பதினைந்து விலையில் வழங்கப்படும்.ஆர்வமுடையவர்கள் கலந்துகொண்டு பயிற்சி தரலாம்.பயன்பெறலாம்.

வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையப் பயன்பாடு பற்றி அறிந்துகொள்ள விழைவார்க்குப் பயன்தரும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் செய்திகள் பெற விரும்புபவர்கள் http://vizhuppuramvalaippathivar.blogspot.com/என்னும் தளத்திலும் திரு. தமிழநம்பி அவர்களின் 94434 40401 என்ற செல்பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

நன்றி: மு. இளங்கோவன்

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்