ஹர்பஜன் சிங்க்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை | சற்றுமுன்...




ஹர்பஜன் சிங்க்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்கு 11 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட்டுள்ளது. சக வீரர் ஸ்ரீசாந்தை அறைந்ததற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஒரு ஆட்டத்தில் மும்பை அணியின் தலைவராக இருந்த ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்தை ஆடுகளத்தில் வைத்து அடித்தது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

இதைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இது குறித்த விசாரணையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் போட்டி நடுவருமான ஃபரூக் இஞ்ஜினியர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் முடிவில் ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டி நிரூபிக்கப்பட்டது எனவும், அதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலரான நிரஞ்சன் ஷா தமிழோசையிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

விழியம்:

1. YouTube - Sreesanth Crying In Mohali IPL

2. YouTube - Sreesanth and Harbhajan Singh :: THE WHOLE THINGS

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Harbhajan banned for rest of IPL, to lose Rs. 3 cr.”

2. BBC SPORT | Cricket | International Teams | India | Harbhajan given long ban for slap

3. BCCI appoints Nanavati as commissioner in Harbhajan enquiry

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்