மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ்-1 வகுப்பு, அதாவது பதினோராம் வகுப்பில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தர விட்டுள்ளது.
69 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு உயர் கல்வி நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது போன்று, 11 வது வகுப்பிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் நிலையாகும். இவ்வாறு பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லாததால், குறிப்பாக தலித் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அரச அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு: TN orders schools to implement 69% resevation in plus one admission: “பிளஸ்1 சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் - பள்ளிகளுக்கு அரசு உத்தரவு”
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்