அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார் | சற்றுமுன்...




அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார்

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. திருச்சி உழவர் சந்தை திடலில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்,

  1. பாவலர் இன்குலாபிற்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கப்படுகிறது.
  2. ‘சொல்லின் செல்வர்’ ஆ.சக்திதாசனுக்கு ‘அயோத்தி தாசர் ஆதவன்’ விருதும்,
  3. வே.ஆணைமுத்துவிற்கு ‘பெரியார் ஒளி விருது’ம் வழங்கப்படுகிறது.
  4. இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு ‘காமராசர்’ விருது,
  5. அப்துல் நாசிர் மதானிக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருது,
  6. கவிஞர் காசி ஆனந்தனுக்கு ‘செம்மொழி ஞாயிறு’

ஆகிய விருதுகளை திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

நன்றி: யாஹூ

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்