உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம்
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பு வழங்கியது. ஐந்து பேர்கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது; இந்த ஒதுக்கீட்டில் வசதிபடைத்தோர், கிரீமி லேயர், விலக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. இவ்வாறு விலக்கபடவில்லையெனில் இடஒதுக்கீட்டின் பலன்கள் வேண்டுபவர்களுக்கு சென்றடையாது எனக் கருத்து தெரிவித்துள்ளது. நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் மக்களுக்கு இந்த ஒதுக்கீடு விலக்கப் படவேண்டும் எனவும் கூறியுள்ளது.
தனியார் கல்விநிறுவங்களில் இந்த ஒதுக்கீடுபற்றி எதுவும் கூறவில்லை. தன்னிடம் எழுப்பப்படாத கேள்வியை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.
SC upholds OBC quota in educational institutes
உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு செல்லும் - சுப்ரீம் கோர்ட்
குறிச்சொற்கள்: தீர்ப்பு, இட ஒதுக்கீடு, உச்ச நீதி மன்றம், OBC, Reservation, Supreme Courtஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்