இந்தியாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்
இந்தியாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல்
![]() |
|
இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில், பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு சுமார் இருபதாயிரம் பறவைகளை கொன்றொழிக்குமாறு கால்நடை மருத்துவ அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
வங்கதேசத்துடனான, எல்லைப்பகுதியில் இருக்கின்ற தளாய் என்ற மாவட்டத்தில் சுமார் 20 கிராமங்களில், பறவைக்காய்ச்சல் வைரஸான எச்.5.என்.1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
திரிபுராவில் பறவைகளை கொன்றொழிக்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகும்.
இந்த வருடத்தில், இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் பரவிய இரண்டாவது மாநிலம் இதுவாகும்.
குறிச்சொற்கள்: நோய், பறவை, இந்தியா, காய்ச்சல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.

April 8th, 2008 at 2:27 pm
puthumaiyana ceithigal