போலி பாஸ்போர்ட்: இருவர் கைது | சற்றுமுன்...




போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

போலி பாஸ்போர்ட்: இருவர் கைது

பாஸ்போர்ட்டில் ஆள் மாறாட்டம், புகைப்பட மாற்றம் செய்து மலேசியாவில் இருந்து சென்னை வந்த இருவரை விமான நிலைய போலீ சார் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர் பாந்தையன். இவரது மகன் சந்திரசேகர் (29). மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர், பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை மாற்றி போலி யாக பாஸ்போர்ட் தயாரித்தார். சிவகங்கையைச் சேர்ந்தவர் சிலையப்பன். இவரது மகன் பாண்டிச்செல்வம்(30). இவரும் மலேசியாவில் இருந்து திரும்பு வதற்காக அடுத்தவர் பாஸ் போர்ட்டில் ஆள் மாறாட்டம் செய்து போலியாக பாஸ் போர்ட் தயாரித்தார். இந்த போலி பாஸ்போர்டு களை பயன்படுத்தி இருவரும் நேற்று காலை கோலாலம் பூரில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தனர். சோதனையில் இருவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்ததால், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக் கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்