மேற்குலக நாடுகள் தாவரத்திலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கு இந்தியா கண்டனம் | சற்றுமுன்...




மேற்குலக நாடுகள் தாவரத்திலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கு இந்தியா கண்டனம்

உலக அளவில் உணவின் விலைகள் ஏறிக்கொண்டே இருப்பதை சமாளிக்க முடியாமல், உலகின் வறியவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அமெரிக்க போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகள் தானியங்களை முலமாகக் கொண்டு எரிபொருள் தயாரிக்கும் திட்டங்களில் ஈடுபடுவது ஆத்திரமூட்டுவதாக இருக்கிறது என்று இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அமைச்சர் சிதம்பரம் அவர்கள் இதைத் தெரிவித்தார்.

சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விஷயங்களை அடிப்படையாக் கொண்டுதான், மேற்குலக நாடுகள் தாவர மூலமான எரிபொருளைத் தயாரிப்பதில் தமது ஆர்வத்தை அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

நியாமான விலையில், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு, உலக ஜனத்தொகையில், பெரும் பங்கு மிகவும் கஷ்டப்பட்டுவர, மலிவான எரிபொருள் கிடைப்பதற்காக சோளம் போன்ற தானியங்களை எரிபொருளாக மாற்றுவது கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அமைச்சர் சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. Expensive oil, food places huge burden on developing countries, Indian finance minister says - International Herald Tribune

2. AFP: Diverting food products to make biofuels is foolish: Indian finance chief

3. PIB Press Release: “The text of the speech of Finance Minister, Shri P. Chidambaram delivered at the Lee Kuan Yew School of Public Policy in Singapore”

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்