டெல்லி துணை கமிஷனர் ராஜ்பீர் சிங் சுட்டுக்கொலை
ராஜ்பீரைக் தாம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள விஜய் பரத்வாஜ், தன்னிடம் பணம் கேட்டு ராஜ்பீர் மிரட்டி வந்ததாகவும், பணம் தர மறுத்தால் கொன்றுவிடுவதாக கூறி வந்ததால், அவரை தாம் சுட்டுக்கொன்றதாகவும் கூறினார்.
டெல்லி போலீஸ் துணைக் கமிஷனர் ராஜ்பீர் சிங், குர்கானில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவரும் ஒருவரால் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக குர்கான் போலீஸ் கமிஷ்னர் மொகீந்தர் லால் இன்று கூறுகையில், ராஜ்பீர் சிங்கை சுட்டுக்கொன்ற விஜய் பரத்வாஜ் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், மெரவுலி - குர்கான் சாலையிலுள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தபோது ராஜ்பீர் சுட்டுக்கொல்லப்பட்டதாவும் தெரிவித்தார்.
கடந்த 1982-ல் சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற ராஜ்பீர் சிங் தனது ‘என்கவுன்டர்’ திறமையால் படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர். இவர், இதுவரை 50-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: யாஹு
மேலும் விவரங்களுக்கு:
1. Encounter specialist killed | Controversial past
2. NDTV.com: Who was ACP Rajbir Singh?
3. Bhardwaj used Rajbir's gun to kill him: Cops - India - The Times of India
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்