கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு | சற்றுமுன்...




கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

கைத்தறி துணிகளை பயன்படுத்துங்கள் இளைஞர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “”கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி, இளைஞர்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்,” என, அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். எழும்பூர் கோஆப்டெக்ஸ் வளாகத்தில் நடந்த தேசிய கைத்தறி கண்காட்சியைத் துவக்கி வைத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: தொடர்ந்து 53வது ஆண்டாக இந்த கண்காட்சி நடக்கிறது. கடந்தாண்டு தமிழகத்தில் 105 கோடி ரூபாய்க்கு கைத்தறி துணிகள் விற்பனையாகின. நடப்பாண்டு விற்பனை இலக்கான 125 கோடி ரூபாயில், 120 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. நெசவாளர்களுக்கான காப்பீடு 200 ரூபாய் வீதம் நான்கு கோடி ரூபாயை அரசே செலுத்தி வருகிறது. முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும், இறந்தவர்கள் வாரிசுகளுக்கு 350 ரூபாயில் இருந்து 550 ரூபாயாகவும் வழங்கப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை தள்ளுபடி மானியம் 208 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி துணிகளைப் பயன்படுத்தி சிறப்பான நிலை, எழுச்சியை இளைஞர்கள் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார். கோஆப்டெக்ஸ் இயக்குனர் நிர்மலா வரவேற்றார். கைத்தறித் த�%A

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்