பி.டி.உஷா சர்வதேச வீராங்கனை அல்ல: அஞ்சு பாபி ஜார்ஜ்
| பி.டி.உஷா சர்வதேச வீராங்கனை அல்ல: அஞ்சு பாபி ஜார்ஜ் |
கொச்சி: பி.டி.உஷா ஒன்றும் சர்வதேச தரத்திலான வீராங்கனை அல்ல. அவரும், மில்காசிங்கும் ஆசிய அளவிலான தரம் கொண்டவர்களாகவே விளங்கினர். உஷாவை எனது முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இருப்பினும் கேரள அரசு அவரை சரிவர கண்டு கொள்ளாததால் சென்னைக்கு இடம் பெயர்ந்து தமிழக வீராங்கனையாக நீளம் தாண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் பய்யோலி எக்ஸ்பிரஸ் என செல்லமாக வர்ணிக்கப்பட்ட, இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தடகளத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த, ஒலிம்பிக் போட்டியில் இந்திய அளவில் சாதனை படைத்தவரான பி.டி.உஷா மீது பாய்ந்துள்ளார் அஞ்சு.
சமீபத்தில் மலையாள மனோரமா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பி.டி.உஷாவும், மில்கா சிங்கும் சர்வதேச தரத்திலான வீரர்கள் அல்ல. ஆசிய அளவிலான வீரர்களாகவே அவர்களது காலத்தில் திகழ்ந்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2008/03/18/india-chennai-exp-clashes-with-payyoli-express.html
குறிச்சொற்கள்: சர்வதேசம், பி.டி.உஷா, விளையாட்டு, வீராங்கனை, அஞ்சு பாபி ஜார்ஜ்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்