சுற்றுலாப் பயணி கொலையை மூடி மறைக்க முயன்றதாக கோவா பொலிஸார் மீது குற்றச்சாட்டு
பதின்ம வயதைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டதை, பொலிஸார் மறைக்க முயன்றதாக, இந்தியாவின் கோவா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெரிதும் கவனத்தை ஈர்த்த இந்த விடயத்தில், பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கார்லெட் கீலிங் என்ற பெண் போதைப் பொருளை உட்கொண்டதை அடுத்து நீரில் மூழ்கியதாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்தப் பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக மறுவிசாரணை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளூர் நபர் ஒருவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் ராய்ட்டர் செய்தி சேவைக்குக் கருத்து கூறிய கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர், இது ஒரு கொலை என்றும், இதனை பொலிஸார் மறைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நன்றி: பிபிசி
மேலும் விவரங்களுக்கு:
1. British teen raped, killed on Goa beach- Hindustan Times
2. The Hindu News Update Service: “Goa death case may affect tourism adversely: Pacheco”
3. NDTV.com: Scarlett's mother under scanner
குறிச்சொற்கள்: சுற்றுலா, போதை, கோவாஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்