இலங்கை ராணுவம் தாக்குதல் - தமிழ் எம்.பி.படுகொலை
இலங்கை ராணுவம் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. கி.சிவநேசன் கொல்லப்பட்டார்.
இன்று இலங்கை பாராளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற சிவநேசன், கொழும்பிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். மதியம் 1.20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிவநேசன், அவரது ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்ததார்கள்.
இந்த சம்பவத்திற்கும், அரசுப் படைகளுக்கும் தொடர்பு இல்லை என்று ராணுவம் மறுத்துள்ளது. விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ராணுவ நடமாட்டமே கிடையாது என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சென்ற தம்மை ஏற்கனவே சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி இலங்கை ராணுவம் மிரட்டியிருந்ததாக கடந்த பிப்ரவரி 21 ம் தேதியன்று சிவநேசன், பாராளுமன்றத்தில் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் உயிரிழந்துள்ள மூன்றாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சிவநேசன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது தமிழ் எம்.பியும் ஆவார்.
நன்றி: யாஹு | தட்ஸ்தமிழ்
மேலும் விவரங்களுக்கு:
1. Tamil Daily News Page @ Puthinam.com: “சிறிலங்காப் படையினரால் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை”
2. TamilNet: 06.03.08 Jaffna TNA MP Sivanesan killed in DPU Claymore attack
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்