உலக செய்திகள்: கொலம்பியா, அர்மீனியா
1. BBC NEWS | South Asia | S Lanka finds boat migrants dead: இலங்கையின் திருகோணமலை அருகே திசை தவறிய படகில், உணவு மற்றும் தண்ணீர் இல்லாதபடியால் இருபது பேர் மரணமடைந்துள்ளார்கள். பர்மாவிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் அகதிகளாய் கிளம்பி வாய்ப்புகளைத் தேடி தாய்லாந்து மற்றும் மலேஷியாவை நோக்கி செல்ல ஆரம்பத்த படகில் இருந்தவர்களில் 71 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
2. Chavez warns of war with Colombia - Yahoo! News: கொலம்பியா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே வெனிசுவேலா இராணுவமும் ஈக்வடார் நாட்டின் படைகளும் அணிவகுத்திருக்கின்றன. அமெரிக்காவின் ஆணைக்குட்பட்டு ஈகுவடருக்குள் அத்துமீறி நுழைந்து ஈக்வடரின் போராளியை (Revolutionary Armed Forces of Colombia - FARC) கொலம்பியா கொன்றதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3. Emergency Order Empties Armenian Capital’s Streets - New York Times: அர்மீனியாவில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி கிளர்ச்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனமானது. இதன் விளைவாக நடந்த போராட்டங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். ருஷியாவின் முன்னாள் அங்கத்தினரான் ஜார்ஜியா போன்ற நாடுகளிலும் இது போன்ற போராட்டங்கள் ஆட்சி மாற்றத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்