ஜார்ஜ் பெர்ணான்டஸை சிபிஐ விசாரிக்கும்
பாரக் ஏவுகணை வாங்கியது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதை சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக கடற்படை முன்னாள் தலைமை தளபதி சுஷில் குமாரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. இவர்கள் இருவர் பெயரும் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கருத்தை நிராகரித்துவிட்டு இஸ்ரேல் நிறுவனத்திடமிருந்து பாரக் ஏவுகணையை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ஜார்ஜ் பெர்ணான்டஸ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அப்போது இந்த ஏவுகணை வாங்கப்பட்டது.
நன்றி: தினமணி
மேலும் விவரங்களுக்கு: NDTV.com: CBI to summon George Fernandes in Barak missile case
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்