பயஸ் தலைமையில் விளையாடமாட்டோம்: டேவிஸ் கோப்பை வீரர்கள் போர்க்கொடி
மகேஷ் பூபதி, பிரகாஷ் அமிர்தராஜ், ரோஹன் போபண்ணா, கரண் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட இந்திய டேவிஸ் கோப்பை குழு, சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் விளையாடி, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
அடுத்த சுற்று வரும் ஏப்ரலில் நடைபெற உளளது. இந்தியக் குழுவிற்கு, விளையாடாத கேப்டனாக லியாண்டர் பயஸ் இருந்தார்.
இதற்கிடையே வீரர்கள் அனைவரும் கூட்டாக பயஸின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்து இந்திய சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘பயஸின் தலைமையில் நாங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம். ஆதலால் எதிர்வரும் போட்டிகளில் அவரது தலைமையில் விளையாட விரும்பவில்லை’ எனத் தெரிவித்துள்ளனர்.
கடிதம் வந்ததை உறுதி செய்த அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செயலர் அனில் கண்ணா, அவர்களது முறையீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும் கூறியுள்ளதாவது:
பயஸ் குறித்து, டேவிஸ் கோப்பை வீரர்கள் எழுதிய கடிதம் 3 தினங்களுக்கு முன்பு இந்திய சங்கத்துக்கு வந்துள்ளது. அவர்களது முறையீடு குறித்து தேர்வுக்குழுவும், செயற்குழுவும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்திய டென்னிஸின் நலம் கருதி அக்குழுவினர் நல்ல முடிவு மேற்கொள்வார்கள் என நம்புகிறேன். எதுவானாலும் ஏப்ரலில் நடைபெற உள்ள அடுத்த சுற்றுக்கு முன்பு தெரியவரும் என்றார் அவர்.
டேவிஸ் கோப்பை போட்டியின்போது பயஸ் பொதுஇடத்தில் திட்டியதால் வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பிரகாஷ் அமிர்தராஜ் உடல்தகுதி குறித்து பயஸ் வெளியிட்ட கருத்து, வீரர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸின் சமீபகால வரலாற்றில், அணியின் விளையாடாத கேப்டன், இம்மாதிரி பகிரங்கமாக அணி வீரர்களின் அதிருப்திக்குள்ளாவது இதுவே முதல்முறையாகும்.
நன்றி: தினமணி
மேலும் விவரங்களுக்கு:
1. The Hindu : Sport / Tennis : Teammates up in arms against Paes
2. The Hindu News Update Service: “Krishnans refuse to react to tennis players’ revolt”
3. NDTV.com: Paes wants Olympic medal with Mahesh Bhupathi
குறிச்சொல் ஏதும் இல்லை.இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்