இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரையில் தாக்குதல்: 40 பேர் பலி | சற்றுமுன்...




இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரையில் தாக்குதல்: 40 பேர் பலி

இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரை ஒன்றில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் பாக்தாத்துக்குத் தெற்கே நடந்த இந்தத் தாக்குதலில் குண்டு பொருத்தப்பட்ட சட்டையை அணிந்த ஒருவர் ஷியா முஸ்லிம்களின் கர்பாலா நகரிலிலுள்ள புனிதத் தலத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் வெடிக்க வைத்திருக்கிறார்.

இறைதூதர் முகம்மது அவர்களின் பேரனான இமாம் ஹசெய்ன் அவர்களிற்காக நடத்தப்படுகின்ற வருடாந்த நினைவு நிகழ்ச்சியின் கடைசி நாளனான இன்று ஞாயிற்றுக் கிழமை இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னதாக பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இந்த யாத்திரிகர் மீது சில சிறு தாக்குதல்கள் நடந்திருந்தன.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS | Middle East | Bomber strikes Iraq Shia pilgrims

2. Suicide Bomber Kills 40 at Iraq Highway Rest Stop - New York Times

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்