பிரபாகரன் தப்ப இடி அமீன் தீர்வை சொல்கிறது இலங்கை
| இடி அமீன் வழியில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பி வெளிநாட்டில் தஞ்சம் புகலாம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாபஸ் பெற்றதிலிருந்து, தமிழர் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை. புலிகளின் மன் உறுதியை குலைக்கும் விதமாக, குண்டு வீச்சில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், காயமடைந்து விட்டதாகவும் வெவ்வேறு பொய்யான தகவல்களை இலங்கை அரசு பரப்பி வருகிறது. இந்நிலையில், போரில் தோற்று பிரபாகரன் இலங்கையைவிட்டு தப்பிச்செல்ல ஏதோ தருணம் பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக, இடி அமீன் பாணியில் பிரபாகரன் வெளிநாட்டில் தஞ்சம் புக உதவும் தீர்வை தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது. உகாண்டாவில் கடந்த 1971 ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய இடி அமீன், 1979 ம் ஆண்டு நிகழ்ந்த உகாண்டா - தான்சானியா போருக்குப் பின்னர் லிபியாவுக்கு தப்பிச் சென்றார்.பின்னர் அவர் 1981 ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சென்று, 2003 ம் ஆண்டு இறக்கும் வரை அங்கேயே தங்கி இருந்தார். இந்நிலையில் இதுபோன்றதொரு தீர்வை பிரபாகரனுக்கு தாங்களும் தெரிவிப்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் பாலிதா கோஹனா கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ” பிரபாகரன் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினால் , ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா நிச்சயம் அவரை பிடித்துவிடும்.மேலும் இந்தியாவும் அவ்வப்போது பிரபாகரனை நாடு கடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி வருகிறது ” என்று கூறினார். பிரபாகரன் வெளிநாட்டில் பத்திரமாக புகலிடம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை நார்வே மேற்கொண்டு வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” அது நல்ல யோசனை இல்லையா ? இந்த இடி அமீன் தீர்வு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது ” என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். |
| (மூலம் - வெப்துனியா) |
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்