வேளாண் பல்கலை/கல்லூரிகள் மூடப்பட்டன
வேலைவாய்ப்புக் கோரி தமிழக வேளாண் கல்லூரிகளின் மணவர்கள் தொடர் உண்ணாவிரதங்களை மேற்கொண்டுள்ளதால் தமிழ்நாடு விவசாய பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளும், விடுதிகளும் கால வரையறையின்றி மூடப்பட்டன.
மாணவர்கள் விடுதிகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
முன்னதாக மாணவர் பிரதிநிதிகள் தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தனர். அப்போது அவர் பேச்சுவார்த்தைகளுக்கு முன் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்ட வேண்டும் என்றும் மாணவர்கள் தாமாகவே தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்பில் எல்லோருக்கும் அரசு வேலை தரவேண்டும் என்பது சாத்தியமாகாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சரின் நடவடிக்கை வருத்தம் தருவதாக மாணவர் பிரதிநிதிகள் தெரிவித்தனர். முதல்வரே நேரில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
TN: TNAU colleges, hostels closed - The hindu
குறிச்சொற்கள்: தமிழகம், தமிழ்நாடு, மாணவர் போராட்டம், மாணவர்கள், வேளாண் படிப்பு, வேளாண் கல்லூரி, வீரபாண்டி ஆறுமுகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்