வளைகுடாவில் தவிக்கும் ஆந்திர தொழிலாளர்கள்
| வளைகுடாவில் தவிக்கும் ஆந்திர தொழிலாளர்கள் மீட்டு உதவ டி.ஆர்.எஸ். கோரிக்கை திங்கள்கிழமை, செப்டம்பர் 10, 2007 |
ஹைதராபாத்:
வளைகுடா நாடுகளில் வேலைக்காக சென்று வேலை கிடைக்காமல் சிரமப்படும் ஆந்திர மாநில தொழிலாளர்களை ஆந்திராவுக்கு வரவழைத்து மாநில அரசு வேலை தர வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தெலுங்கான ராஷ்டிரி சமிதி கட்சியின் சட்டசபைத் தலைவர் விஜயராம ராவ் தலைமையிலான குழுவினர், முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராவ் பேசுகையில், ஆந்திராவைச் சேர்ந்த பலர், சரியானவேலை கிடைக்காமல், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மிகவும் சிரமமான நிலையில் வசித்து வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, சாப்பாட்டுக்கும் வழியில்லை.
வேலையை நம்பி அங்கு சென்று இவர்கள் ஏமாந்துள்ளனர். எனவே அவர்களை ஆந்திராவுக்கு மாநில அரசு திரும்ப அழைக்க வேண்டும். அவர்கள் மாநிலத்திற்குத் திரும்புவற்கான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரவழைத்து அவர்களுக்கு வேலையும் தர வேண்டும்.
இதேபோன்று கேரளா மற்றும் தமிழக அரசுகள் செய்துள்ளன. தெலுங்கான பகுதியைச் சேர்ந்த 1.5 லட்சம் தொழிலார்கள் வளைகுடா நாடுளில் சிரம நிலையில் உள்ளனர். எங்களது கோரிக்கை குறித்து உரிய முறையில் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றார் ராவ்.
www.thatstamil.com
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்