ICL அமைப்பில் இணையும் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு ஆயுட்காலத் தடை?
இந்தியன் கிரிக்கெட் லீக்கில் இணைபவர்களுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் போர்டு எச்சரித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்பில் பல வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர் லாராவும் இதில் உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களான இன்சமாம் உல்ஹக், அப்துல் ரசாக், இம்ரான் பர்கத், முகமது யூசுப் ஆகியோர் இதில் இணைய உள்ளனர். அவ்வாறு இணைபவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடை விதிக்கப்படும் எனவும் விரைவில் தங்கள் முடிவை மாற்றி கொள்ள வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் நசீம் அஷ்ரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமலர்
குறிச்சொற்கள்: போர், இந்தியா, கிரிக்கெட்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்