விடுதலைப் புலிகள் - இலங்கை இராணுவம் மோதல் | சற்றுமுன்...




விடுதலைப் புலிகள் - இலங்கை இராணுவம் மோதல்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா - மன்னார் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்குமிடையே கடும் சண்டை மூண்டது.

திங்கட் கிழமை பிற்பகல் 4 மணியளவில் மன்னார் - வவுனியா மாவட்ட எல்லைப் பகுதிகளை அண்டிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி இலங்கை இராணுவத்தினர் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடாத்தினர்.

இரு மணி நேரமாக இரு தரப்புக்குமிடையில் கடும் சண்டை மூண்டது. இச் சமரில் 3 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

இச் சமரில் விடுதலைப் புலிகளுக்கு எதுவித இழப்பும் ஏற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

source[தகவல் ஆதாரம்] : http://www.tamilnet.com/
குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்