ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: மகா. அரசு நடவடிக்கை எடுக்கும் | சற்றுமுன்...




ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: மகா. அரசு நடவடிக்கை எடுக்கும்

1992-93 வருடங்களில் மும்பையில் நடந்த கலவரங்கள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை ஆய்வு செய்ய காவல்துறையையும் சட்டத்துறையையும் மகாராட்டிர முதல்வர் விலாஸ்ரராவ் தேஷ்முக் ஆணையிட்டுள்ளார். இந்தக் கலவரங்களில் பங்கேற்ற அரசியல் தலைவர்களின் மீது, சிவசேனையின் தலைவர் பால் தாக்கரே உட்பட, நடவடிக்கை எடுப்பது பற்றிய நிகழ்வறிக்கையையும் காங்கிரஸ் மேலிடத்திற்கு சமர்ப்பித்துள்ளார். கட்சியின் பொது செயலர் மார்கரேட் ஆல்வா கடந்த ஏழாம் தேதியன்று மூம்பை வந்திருந்தபோது இந்த அறிக்கையை அவரிடம் கொடுத்தார். பிரபல சினிமா இயக்குனர் மகேஷ் பட்டும் முன்னாள் அமைச்சர் நசீம் கானும் இந்த அறிக்கை மீது தகுந்த எஅடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டி மனு கொடுத்துள்ளனர்.ஆகஸ்ட் 20ம் தேதி யன்று பல முஸ்லிம் அமைப்புக்கள் இவ்வறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.

The Hindu News Update Service

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்