அசோமில் தீவிரவாதம்: இந்தி பேசுவோர் மீது தாக்குதல் | சற்றுமுன்...




அசோமில் தீவிரவாதம்: இந்தி பேசுவோர் மீது தாக்குதல்

அசோம் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாதத்தை முன்னெடுத்து இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தி அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.இத்தகைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 15 பேர் மரணமடைந்திருக்கின்றனர், 28 பேர் காயமடைந்திருக்கின்றனர். கடைசியாக கர்பி அங்லோங் மாவட்டத்தில் 8 இந்தி பேசும் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA)யும் கர்பி லோங்க்ரி வடக்கு கச்சார் விடுதலை முன்னணியும் (KLNLF) சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தொழிலாளிகளை அவர்களது வீட்டிலிருந்து வெளியே இழுத்து தானியங்கி துப்பாக்கி முனையில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மேலும்…India eNews - Terror run in Assam by militants, Hindi-speakers fresh targets

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்