பிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆணை. | சற்றுமுன்...




பிளசண்ட் ஸ்டே: நான்கு தளங்களை இடிக்க நீதிமன்றம் ஆணை.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 1995ம் ஆண்டு கொடைக்கானலில் ராகேஷ் மிட்டல் என்பவர் பிளசன்ட்ஸ் ஸ்டே என்ற பெயரில் ஓட்டல் கட்டினார். ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த ஓட்டல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து பழனிமலை பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் முகாபாத்யாயா, சுகுணா ஆகியோர் விசாரித்து வந்தனர். 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 6 மாடிகள் கொண்ட பிளசன்ட்ஸ் ஸ்டே ஓட்டல் விதிமுறை மீறி சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் மாடிக்கு மட்டுமே முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 4 மாடிகளை 6 மாத காலத்துக்குள் இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் இந்த விதிமீறலுக்கு துணைபோகும் விதமாக திருத்தப்பட்ட நகராட்சி சட்டம் 3வது பிரிவையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிளசன்ட்ஸ் ஸ்டே உழல் வழக்கில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்