ஷில்பா ஷெட்டி மீது இலண்டன் வாழ் இந்தியப்பெண் புகார்.
லண்டனில் வசிக்கும் இந்தியர் ராஜ்குந்த்ரா, சினிமா பட தயாரிப்பாளர். இவரது மனைவி கவிதா. ஷில்பா ஷெட்டி மீது கவிதா ஆங்கில பத்திரிகை ஒன்றில் புகார் கூறியதாவது:-
எங்களது திருமண வாழ்க்கை நிம்மதியாக போய் கொண்டு இருந்தது. சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. சினிமா பட சம்பந்தமாக ஷில்பா ஷெட்டியுடன் எனது கணவர் ராஜ்குந்த்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அன்றில் இருந்து அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர் விவாகரத்து கேட்கிறார். எனது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க ஷில்பா ஷெட்டி துடிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷில்பாஷெட்டியின் செய்தி தொடர்பாளர் டாலே பக்வாகர் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ஷில்பா வும், ராஜ×வும் நல்ல நண்பர் கள்தான். இருவருக்கும் திருமணம் நடந்து விட்டதாக வதந்தி பரப்பபட்டு வருகிறது. இதில் எந்த ஆதாரமும் இல்லை. சினிமா பட சம்பந்த மாக இருவரும் பொது இடங்களில் சந்தித்து இருக்கலாம் என்றார்.
ராஜ்குந்த்ரா கூறும்போது, நாங்கள் நல்ல நண்பர்கள். வியாபாரம் சம்பந்தமாக அவருடன் தொடர்பு உள்ளது. எனது திருமண வாழ்க்கை முடிந்து 1 ஆண்டு ஆகிறது. இதற்கு ஷில்பா எந்த காரணமும் இல்லை.
குறிச்சொற்கள்: திரையுலகம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்