மும்பையில் கேலித்தொல்லை: பெண் மருத்துவமனையில்
சென்னையில் அணமைக்காலத்தில் நடந்த நிகழ்வொன்றை பிரதிபலிப்பதாய் பத்துவயது சிறுமியொருத்தி இளைஞர்கள் நிரம்பிய கார் ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்டு பலத்தக் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளாள்.நான்கு எலும்புமுறிவுகளுடனும் காலில் தீக்காயங்களுடனும் செம்பூர் மருத்துமனையொன்றில் சிகிட்சை பெற்று வருகிறாள். அவளது உடல்நிலை தேறிவருவதாகக் தெரிகிறது.
ஜூலை 14 அன்று தனது அக்கா மற்றும் அவளது தோழியுடன் டியுஷன் முடிந்து வந்துகொண்டிருந்தபோது 20வயது வாலிபர்கள் சிலர் காரில் பிந்தொடர்ந்து பெரிய பெண்களை கேலி பேசியவாறும் ஆபாச சைகைகள் காட்டியும் வந்துள்ளனர். அவர்களுக்கு பயந்து பெரியவர்கள் இருவரும் சாலையைக் கடந்துவிட பத்துவயது சிறுமியின் பாவாடை காரின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு சென்றது. காரை நிறுத்திவிட்டு அந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர்.
NDTV.com:இல் இன்று வந்த செய்தியின் மேல் விவரத்திற்கு..
குறிச்சொற்கள்: சென்னை, பலி, மும்பைஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்