தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்துவிட்டது. | சற்றுமுன்...




தேர்தலோடு திமுகவுடன் உறவு முடிந்துவிட்டது.

ராமதாஸ் திடீர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு திமுகவுடனான உறவு முடிந்து விட்டது. திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.டாக்டர் ராமதாஸுக்கும், திமுக அரசுக்கும் இடையே சமீப காலமாக பல்வேறு விவகாங்களில் மோதல் வெடித்து வருகிறது. லேட்டஸ்டாக, உயர் கல்வித்துறை குறித்து ராமதாஸ் கடுமையாக விமர்சிக்க, அதற்கு படு சூடாக பதிலடி கொடுத்தார் அத்துறை அமைச்சர் பொன்முடி.இந்த நிலையில், பிரதீபா பாட்டீலுக்கு சென்னையில் திமுக நடத்திய பேரணியில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறினார் ராமதாஸ். இதற்கு முதல்வர் கருணாநிதி விரிவான, விளக்கமான பதிலை அளித்து, ராமதாஸின் பேச்சுக்கள் கூட்டணியின் நல்லுறவைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக சற்று காட்டமாகவே பதிலளித்தார்.

மேலும்…
குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்