UK தீவிரவாதம்: இந்திய மருத்துவர் ஆசி.யில் கைது
இலண்டனிலும் கிளாஸ்கோவிலும் தவறிய தீவிரவாத தாக்குதல் முன்னிட்டு ஒரு இந்திய மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு மருத்துவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் தெரிவித்தார். கான்பெர்ராவில் இதழாளர்களுக்கு அளித்த நேர்முகத்தில் இருபத்தியேழு வயதான அந்த மருத்துவர் கிழக்கு குயீன்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் பதிவாளராக பணிபுரிந்து வந்தார் என்றும் நாட்டைவிட்டு அவர் ஒருவழி டிக்கெட் எடுத்துக் கிளம்பும் முன்னர் தீவிரவாத தடுப்பு காவலர்கள் பிரிஸ்பேன் பன்னாட்டு விமானநிலையத்தில் அவரை கைது செய்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்படும் எட்டாவது நபராகும். அனைவரும் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
குறிச்சொற்கள்: தீவிரவாதம், கைதுஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்