திருமாவளவன் படப் பிரச்னை தீர்ந்தது | சற்றுமுன்...




திருமாவளவன் படப் பிரச்னை தீர்ந்தது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராளியாக நடித்துள்ள படம் ‘அன்புத்தோழி’. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்ததால் படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை. இதனால் படம் மேல்முறையீட்டுக்கு சென்றது. அங்கு “அன்புத்தோழி’ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான படம் இல்லை என தயாரிப்பாளர் பிரபாவதியும், இயக்குநர் எல்.ஜி.ரவிச்சந்திரனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கமளித்தனர்.

இதையடுத்து 12 உறுப்பினர்கள் கொண்ட ரிவைசிங் கமிட்டி படத்தை வெள்ளிக்கிழமை பார்த்தது. ‘ஈழம்‘, ‘வெறியாட்டம்‘ போன்ற வார்த்தைகளையும், சில காட்சிகளையும் நீக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதை தயாரிப்பு தரப்பு ஏற்றுக்கொள்ளவே படத்துக்கு “யு’ சான்றிதழ் வழங்கப்பட்டது. படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

தினமணி

குறிச்சொற்கள்:

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்