பிரதிபா தேர்வில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தொடர்பு: உமா பாரதி | சற்றுமுன்...




பிரதிபா தேர்வில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தொடர்பு: உமா பாரதி

ஆளும் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதால் அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என சிவசேனைக்கு உமா பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து சிவசேனை தலைவர் பால்தாக்கரேவுக்கு, மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவருமான உமாபாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பிரதிபா பாட்டீலுக்கு தாங்கள் ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதாக ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

ஆனால், ராஜஸ்தான் மாநில அரசு கொண்டு வந்த மதமாற்றத்தை கண்காணிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் என்ற முறையில் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். எனவே, அவருக்கு ஆதரவு அளிப்பது என்பது ஹிந்துத்வா கொள்கைகளுக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி

குறிச்சொல் ஏதும் இல்லை.

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்