‘சர்’ ஆனார் சல்மான் ருஷ்டி | சற்றுமுன்...




‘சர்’ ஆனார் சல்மான் ருஷ்டி

பிரபல இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு சனிக்கிழமை நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவித்தார் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத். பல்வேறு துறைகளில் அரும்பங்கு ஆற்றியதற்காக பிரிட்டனில் குடியேறியுள்ள மேலும் 19 இந்தியர்களுக்கும் அவர் விருது வழங்கி கௌரவித்தார்.

ராணியின் பிறந்த நாளையொட்டி பல துறைகளில் சிறந்து விளங்குவோரை கௌரவிக்க பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இந்த 20 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

ருஷ்டியின் 60வது பிறந்தாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. புக்கர் பரிசையும் வென்றுள்ள ருஷ்டி தற்போது அமெரிக்காவில் தான் அதிகம் வசிக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

  1. ஷமி சக்கரவர்த்தி, இயக்குநர், லிபர்ட்டி மனித உரிமைகள் அமைப்பு,
  2. சஞ்சய் ஆனந்த் (ஹோட்டல் தொழிலதிபர்),
  3. மயூர் கேசவ்ஜி லகானி (டாக்டர்),
  4. ரஷ்மி சுக்லா (பொதுச் சுகாதாரத்துறை பிராந்திய இயக்குநர்).
  5. ராஜ்குமார் அகர்வால் (மருந்து உற்பத்தி துறை),
  6. ரமேஷ் கோவிந்த்லால் காந்தி,
  7. அசோக் கோஸ்,
  8. ஜஸ்மிந்தர் கிரேவல்,
  9. டேனியல் யாமின் பிரகாஷ் கான்,
  10. பேராசிரியர் சீனிவாசன் ரகுநாதன் (விண்வெளி ஆய்வு பொறியியல் ஆராய்ச்சி),
  11. சந்தோஷ் தாஸ்,
  12. மிருதுளா தேசாய்,
  13. விநோத் தேசாய்,
  14. ரவீந்திர பிராக்ஜி கோவிந்திதா,
  15. சுதர்ஷன் குமாரி மொகிந்திரா,
  16. சத்தியநாராயண் சர்க்கார்,
  17. தேவி தயாள் சர்மா,
  18. ஜஸ்வந்த் சீரா

உள்ளிட்டோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கௌரவ பட்டம்

குறிச்சொற்கள்: ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்